தொல்காப்பியர் காலம் கி.மு.711

தொல்காப்பியர் நாள் சித்திரை மாதம் முழுமதிநாள் (சித்திரா பௌர்ணமி) என்றும், அவரது கால எல்லை கி.மு.711 என்றும் தமிழறிஞர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், கோவிலூர் திருமடத்தில் கோவிலூர் ஆதீனம் மற்றும் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் ஆகியன சார்பில் தொல்காப்பியர் காலத்தை நிர்ணயம் செய்வதற்காக தொல்காப்பியர் கால ஆய்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. (2009 டிசம்பர் 26 முதல் 28 வரை)
இக்கருததரங்கு தொடக்க விழாவில் கோவிலூர் ஆதீனம் நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் தமிழ்ண்ணல், பேராசிரியர் ஆறு.அழகப்பன், செம்மொழித் தமிழாய்வு மையப் பொறுப்பு இயக்குனர் க.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் புலவர் த.சுந்தரராசன் எழுதிய “தொல்காப்பியர் காலம்’ என்ற நூலும், “தொல்காப்பியர் கால ஆய்வுக் கருத்தரங்கு மலரும் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களால் வெளியிடப்பட்டது.

கருத்தரங்கில் 5 அமர்வுகள் நடைபெற்றன. புலவர் அரங்கசாமி, முனைவர் லெட்சுமி  நாராயணன், புலவர் வெற்றியழகன், புலவர் இளங்குமரனார் ஆகியோர் தொல்காப்பியர் காலம் குறித்த 27 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். எண் பேராயக்குழு உறுப்பினர் பாவலர் வா.மு.சேதுராமன் வாழ்த்துரை வழங்கினார்.

இக்கருத்தரங்கை முனைவர் ஆறு.அழகப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.

(நன்றி முகம் மாத இதழ் ஏப்ரல் 2010)

0 மறுவினைகள் to “தொல்காப்பியர் காலம் கி.மு.711”



  1. பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக