துணை நலம் காக்கும் தூய காதல்

“”சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’


மாறன் பொறையனார் பாடல் 38, ஐந்திணை ஐம்பது
இந்தப் பாடலின் பொருள் வருமாறு: சுனையில் சிறிது அளவே நீர் உள்ளது. ஆண் மான் குடிக்கவில்லை என்றால் பெண் மான் குடிக்காது. ஆனால் அங்கு ஒரு மான் குடிப்பதற்கு ஏற்ற அளவிலேயே நீர் உள்ளது. எனவே ஆண் மான் சுனை நீரில் வாயை வைத்துக் குடிப்பது போல பாவனை செய்து பெண் மானைக் குடிக்க வைக்கிறது. இதுதான் காதலர் உள்ளத்தின் நெறியாகும். (பொருள். கலைஆண் மான்; பிணை பெண்மான்.)
சங்க காலப் பாடல்கள் அக்கால சூழ்நிலையை தெளிவாக படம் பிடித்து காட்டுவதுடன், மனித குலத்திற்கு தேவையான நல்ல செய்திகளையும் கொண்டுள்ளது. கணவன்மனைவி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டும். ஒருவர் நலத்தை மற்றவர் எண்ண வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் பண்பு வேண்டும் என்ற நற்கருத்துக்களை இந்தப் பாடல் எடுத்துக் கூறுவது நம்முடைய உள்ளத்தை கவரக் கூடியதாகும்.
இவ்விதம் வாழக் கற்றுக் கொண்டால் மணமக்கள் வாழ்வு நலமாகவும், வளமாகவும் அமையும் என்று மான்கள் தங்கள் செயல் மூலம் தெரிவிப்பதாக புலவர் நயம்பட கூறுவது இலக்கிய இன்பத்தை அளிப்பதாகும்.

0 மறுவினைகள் to “துணை நலம் காக்கும் தூய காதல்”



  1. பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக